யாழ். ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட 148 பேரின் பரிசோதனை முடிவுகள் சற்று முன்னதாக யாழ் போதனா வைத்தியசலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் இன்று (ஜூலை-15) மேற்கொள்ளப்பட்ட 148 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாற இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 148 பேரின் விபரங்கள் வருமாறு,
போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - 2 பேர்.
போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 5 பேர்.
விமானப்படை தனிமைப்படுத்தல் மையம் முல்லைத்தீவு - 98 பேர்.
பூவரசங்குளம் தனிமைப்படுத்தல் மையம் - 29 பேர்.
விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையம் - 9 பேர்.
பொது வைத்தியசாலை வவுனியா - 4 பேர்.
பொது வைத்தியசாலை மன்னார் - ஒருவர்
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்